விமானப்படைக்கு புதிய தலைமைத் தளபதி நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப்படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன நேற்று சேவையில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், லசித சுமனவீரவுக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க, இன்று (04) ஏயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீரவிடம் நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *