கடற்படை சக்தி,அணு ஆயுதங்கள் மிக முக்கியமானவை- வடகொரிய ஜனாதிபதி
வடகொரிய ஜனாதிபதி கிம் கப்பல் கட்டும் தளங்களுக்கு சென்று அங்குள்ள கடற்படை கப்பல்கள் ,அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமான திட்டங்களை நேரில் ஆய்வு செய்தார்.
இதன் போது கருத்து தெரிவித்தார்.கடற்படை சக்தியை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாக வலியுறுத்தினார்.கடலால் சூழப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கு,கடற்படை சக்தி மற்றும் அணுஆயுதங்கள் மிக முக்கியமானவை என்று மேலும் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவானது கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை பரிசோதனை செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.