பதிவுகள்

காரைதீவு நடனநர்த்தகி தக்ஷாலினிக்கு இந்தியா திருவண்ணாமலையில் ஆடல் வல்லான் கலைவளர்மணி விருது!

இந்தியா திருவண்ணாமலையில் இவ்வாரம் நடைபெற்ற 22வது அனைத்துலக திருமந்திரத்தமிழ் ஆய்வு மாநாடு_ 2025 நிகழ்வில் காரைதீவைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவி செல்வி ஜெயகோபன் தக்ஷாலினி
” ஆடல் வல்லான் கலைவளர்மணி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அவர் இந்த வாரம் அவரது குழுவினருடன் தமிழ்நாடு சென்றிருந்தார்.
அங்கு திருவண்ணாமலையில் குழு நடனம் இடம்பெற்றது.
திருவையாறு ஔவை அறக்கட்டளை மூலம் திருமூலர் ஆச்சிரமத்தில் நடாத்திய 22வது அனைத்துலக திருமந்திரத்தமிழ் ஆய்வு மாநாடு_ 2025 நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும் சிதம்பரம் ஆலய சந்நிதானத்தில் நடனம் இடம்பெற்றது.
அங்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *