மூத்த விரிவுரையாளர்கள் ஆறுபேர் பேராசிரியர்களாக தரமுயர்வு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளர்களாக பணியாற்றிய ஆறு பேர் பேராசிரியர்களாக தரமுயர பல்கலைக்கழக பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பேரவையின் மாதாந்தக்கூட்டம் துணைவேந்தர் சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்ற போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடைமுறைகளுக்கு அமைவாக இந்த பதவி உயர்வுக்கு பேரவை அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து, சத்திரசிகிச்சை துறையின் விரிவுரையாளர் ,வைத்திய கலாநிதி ராஜேந்திரா அவர்கள் சத்திர சிகிச்சை துறை பேராசிரியராகவும்,மருத்துவ துறையின் விரிவுரையாளர் ,வைத்திய கலாநிதி என்.சுகந்தன் அவர்கள் மருத்துவப் பேராசிரியராகவும், மகப்பேற்றியல் மற்றும் பெண்களுக்கான நோயியல் துறை நிபுணர் வைத்திய கலாநிதி கே.முகுந்தன் அவர்கள் மகப்பேற்றியல் மற்றும் பெண்களுக்கான நோயியல் துறை பேராசிரியராகவும் தரமுயர்த்தப்பட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கலைப்பீட பீடாதிபதியும்,புவியியல் துறை விரிவுரையாளருமான கலாநிதி சுதாகர் அவர்கள் புவியியல் துறை பேராசிரியராகவும்,தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி செல்வி.எஸ்.சிவசுப்பிரமணியம் அவர்கள் தமிழ் துறை பேராசிரியராகவும்,பொருளியல்துறை விரிவுரையாளர் கலாநிதி எஸ்.விஜயகுமார் அவர்கள் பொருளியல் துறை பேராசிரியராகவும் பதவியுயர்த்தப்பட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *