ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கும் நேரத்தில் தென்கொரியாவில் கொரோனா அலைத் தாக்குதல்.

ஒமெக்ரோன் திரிபு பரவிவரும் தென்கொரியாவில் ஒரே நாளில் தொற்றியவர்கள் எண்ணிக்கை 342,446 ஆகியிருக்கிறது. இன்று மார்ச் 9ம் திகதி நாட்டின் ஜனாதிபதித் தேர்தலின் இறுதி வாக்களிப்பு நாளாகும். இதே நாளில் 158 கொவிட் 19 இறப்புக்களும் பதியப்பட்டிருக்கின்றன. மார்ச் மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் நாட்டில் 200,000 தொற்றுக்கள் புதியதாகக் காணப்பட்டிருக்கின்றன.

கொவிட் 19 தொற்றுக்களைக் கருத்தில் கொண்டு கடந்த மாதம் தென் கொரியாவின் வாக்களிப்புச் சட்டங்களில் மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் தத்தம் தேர்தல் தொகுதி அதிகாரிகளைத் தொடர்புகொண்டால் அவர்களுக்கு வாகன ஒழுங்கு செய்துகொடுக்கப்படும். அவர்களுக்காக தேர்தலின் முதல் நாளிலும், இறுதி நாளிலும் தனிமைப்படுத்தப்பட்ட வாக்களிக்கும் இடங்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *