பால்ய வயதில் தன்னை ஒருவர் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்த எத்தனித்ததை வெளிப்படுத்தினார் தஸ்மானியாவின் முதலமைச்சர்.

தனது 16 வது வயதில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தன்னைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்த முயன்றதாக ஆஸ்ரேலியாவின் தாஸ்மானிய மாநில முதலமைச்சர் பீட்டர் குட்வெய்ன் வெளிப்படுத்தினார். பிள்ளைகள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றிய சட்டங்களை கடுமைப்படுத்துவது பற்றிய பாராளுமன்ற விவாதங்களின் போது குட்வெய்ன் தனது சொந்த வாழ்வில் நடந்த அந்தச் சம்பவம் பற்றிக் குறிப்பிட்டார்.

தன் உயர்கல்விக்காக வேறு கல்லூரிக்குப் போக முதல் பியர் குடிக்க வரும்படி ஆசிரியரொருவர் வரவேற்றதைத் தான் ஏற்று அவரது வீட்டுக்குச் சென்றிருந்ததாகவும் அச்சமயத்தில் அந்த ஆசிரியர் தனது ஆணுடம்பில் கைபோட முயன்றதாகவும் குட்வெய்ன் குறிப்பிட்டார். 

“நான் விடயத்தைப் புரிந்துகொண்டு அவரைத் தள்ளிவிட்டு விலகுமளவுக்கு பலசாலியாக இருந்தேன்,” என்று அவர் குறிப்பிட்டார். அதுதான் தான் அப்படிப்பட்ட சம்பவத்தை வாழ்வில் நேரடியாகச் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாரங்களில் இருப்பவர்கள் தமது பதவியைப் பாவித்து வயதுக்கு வராதவர்களைத் தமது இச்சைக்குப் பயன்படுத்துவதைப் பற்றிய விசாரணைகள் பற்றிப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்படியான சந்தப்பங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரங்களின் மீது நம்பிக்கையை இழந்திருப்பார்கள் அவர்களை விசாரிப்பது பற்றி மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை குட்வெய்ன் சுட்டிக்காட்டினார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *