எம்மொழியின் ஆபரணம்

கற்பனையில் வடிவெடுக்கும்
வனப்புடனே பிறக்கும் – கவிதை
நிசக் கதை கண்டாலும்
மனதினில் சுரக்கும் …

மானை போல துள்ளி
தேனை போல இனிக்கும் – கவிதை
வானை முட்டும் வரையில்
எழுச்சி கீதம் படிக்கும் …

ஆணவங்க ளில்லாத
ஆவணங்கள் ஆகும் – கவிதை
ஆரவாரம் செய்கின்ற
ஆபரணம் இதுவாம்….

இன்ப துன்ப மத்தனையும்
உணர்ச்சி ததும்ப உரைக்கும் – கவிதை
மெய் கூசி பொய் பேசும்
மை தூவி உண்மை வீசும்…

காண்கின்ற கருவெல்லாம்
கருத்தாக மாறும் – கவிதை
நா னென்ற அகங்காரம் புகுத்தாத
நளினத்தின் சாரம்….

ஒவ்வொரு நொடியிலும் வெடிக்கும்
எந்நாளும் இதற்கான நாளே.! – கவிதை
எழுதி படித்து நுகர்ந்து மகிழ்வோம்
உலக கவிதை நாளில் …….!!!

எழுதுவது வெண்பா பாக்யா
சென்னை தமிழ்நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *