யாழ் மத்திய கல்லூரி 279 ஓட்டங்களை குவித்தது|வடக்கின் பெருஞ்சமர்

யாழ் மத்திய கல்லூரி அணி எதிர் யாழ் சென்ஜோண்ஸ் கல்லூரி வருடா வருடம் மோதும் வடக்கின் பெருஞ்சமர் முதல் நாள் நிறைவை எட்டியிருக்கிறது.

முதல் நாள் நிறைவில் யாழ் மத்தியகல்லூரி அணி முதல் இனிங்க்ஸ்க்காக அபாரமாக துடுப்பெடுத்தாடி 279 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருக்கிறது.

தொடர்ந்து முதல் இனிங்க்ஸில் துடுப்பெடுத்தாடி வந்த சென்ஜோண்ஸ் அணி மூன்று விக்கெட்டுக்களை இழந்து 43 ஓட்டங்களை எடுத்த வேளை ஆரம்ப நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

ஆட்டத்தில் யாழ் மத்திய கல்லூரி அணி சார்பில் நிஷாந்தன் அஜய் 76 பந்துகளில் குவித்த 74 ஓட்டங்கள் மற்றும் ஜெகதீஸ்வரன் விதுர்ஷன் 101 பந்துகளில் எடுத்த 71 ஓட்டங்கள் அணியை குறித்த ஓட்ட எண்ணிக்கையை எடுக்க சாதகமானது.

பந்து வீச்சில் சென்ஜோண்ஸ் அணி சார்பில் யோகதாஸ் விதுர்ஷன் 4 விக்கெட்டுக்களையும் அன்ரன் அபிஷேக் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

நாளைய ஆட்டத்தில் சென் ஜோண்ஸ் அணி நின்று நிலைத்தாடி அணியை பலப்படுத்த வேண்டிய நிலையில் இருப்பதால் நாளைய ஆட்டம் இன்னும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *