IPL இறுதிப்போட்டியில் சண்ரைசேர்ஸ் ஹைதராபாத்
IPL இறுதிப்போட்டியில் கோல்கத்தா நைட்ரைடேர்ஸ் அணியுடன் மோதுவதற்கு சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி இன்று தகுதிபெற்றுள்ளது.
இன்று சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற நொக்கவுட் /எலிமினேற்றர் போட்டியில் பலமான ராஜஸ்தான் ரோயல் அணியை 36 ஓட்டங்களால் அபாரமாக வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
![](https://vetrinadai.com/wp-content/uploads/2024/05/381446929726728906559582.jpg)
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி ஆரம்ப ஓவர்களில் Powerplay க்கு முன்னதாக மூன்று விக்கெட்டுக்களை இழந்திருந்தாலும் நிலைத்து நிதானமாக ஆடி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை எடுத்தது.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி Powerplay க்கு முன்னதாக ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்திருந்தாலும், பின்னர் தடுமாறியது.
நிறைவில் 20 ஓவர்களில் 7விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இன்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் பந்துவீசி 23 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்த Shahbaz Ahmed, ஆட்டத்தின் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
![](https://vetrinadai.com/wp-content/uploads/2024/05/3814512750466024156516695.jpg)
இதன்படி ஏற்கனவே இறுதிப்போட்டியில் மிகப்பலமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலில் நுழைந்த கொல்கத்தா நைட்ரைடேர்ஸ் அணியுடன் , இன்று தகுதிபெற்ற சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி வரும் ஞாயிறன்று களம் காணவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.