மழையுடனான வானிலை..!

மழையுடனான வானிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.இந்நிலையில் மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் அமைந்துள்ளன.

குறித்த பகுதிகளில் அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக,

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



அத்துடன் மண்சரிவு அதி அபாய பகுதிகளில் பல்வேறு அரச நிறுவனங்களும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.



இதேவேளை மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் சுமார் 14,000 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும்,

அதில் 2,600இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளன என்றும் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *