நெல்லூர் மசூலிப்பட்டணம் இடையே நாளை மிக்ஜம் புயல் கரையை கடக்கிறது…!

மிக்ஜம் புயலின் காரணமாக தமிழகத்தில் கடும் மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த மழையானது இன்றும் தொடரும் எனவும் பலத்த காற்றுடன் மழை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இப்புயலானது வடக்கு ,வட மேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர கரையில் சென்று நாளை நெல்லூர் மசூலிப்பட்டணம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *