மழையால் கடுமையாக பாதிப்படைந்தது இந்தோனேசியா..!

இந்தோனேசியாவின் சுமத்ரா மாகாணத்தில் ஏற்பட்ட மழையின் காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கடுமையான மழையின் காரணமாக மண்சரிவு , வெள்ள அனர்த்தம் என்பன ஏற்பட்டன. இதன் காரணமாக 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.பலர் தமது வாழ்விடங்களை இழந்து பல பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட இடத்தின் 5 பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை பொது அமைப்புகள் மேற்கொண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *