வைத்தியர் இன்மை..!

போதிய வைத்தியர்கள் இன்மை பிரச்சினை தொடர்ந்தால் வைத்தியசாலைகளை மூடவேண்டிய நிலையேற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.



உரிய தரப்பினர் நாட்டின் மருத்துவ அமைப்புக்குத் தேவையான அளவுக்கு வைத்தியர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்காவிட்டால்,

வைத்தியர்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளை மூடுவது குறித்து தீர்மானிக்கவேண்டிய நிலை ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.



இலங்கை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமால் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படும் வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காததால்,

நாட்டின் மருத்துவத்துறையில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.



நாட்டின் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப நியமிக்கப்படும் வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்,

மேலும் அதிக வைத்தியர்களை உருவாக்கவேண்டும், பயிற்றுவிக்கவேண்டும்,வசதிகளை அதிகரிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *