சிவனொளிபாத மலையிலிருந்து குதித்து காணாமல் போன இளைஞர் கண்டுபிடிப்பு..!

சூரிய வெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற நபர் சிவனொளிபாத மலையிலிருந்த கீழே குதித்து காணாமல் போயிருந்த நிலையில், 3 நாட்களின் பின்னர் நல்ல தண்ணி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மரே தோட்டத்தின் ராஜாமலை பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டார்.

குறிப்பிட்ட இளைஞனை தோட்ட தொழிலாளர்களால் நல்ல தண்ணி பொலிஸிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் பொலிஸாரால் மஸ்கெலியா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு,பின்னர் டிக்கோயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

3 நாட்கள் பொலிஸாரும் இராணுவத்தினரும் குறிப்பிட்ட இளைஞனை தேடும் பணி நடந்த நிலையில் பின்னர் அதனை கைவிட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *