அத்து மீறிய மீன் பிடியால் மீனவர்கள் பாதிப்பு..!

இலங்கை கடற் பகுதியினுள் பிரவேசித்து சட்ட விரோதமான முறையில் மீன் பிடித்ததன் அடிப்படையிலும் மீன் இனங்களுக்கு அழிவை ஏற்படுத்தும் உபகரணங்களை பயன்படுத்தியதன் அடிப்படையிலும் இந்திய மீனவர்கள் 3 படகுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதன் அடிப்படையில் இன்றைய தினம் வழக்கு விசாரணை நடந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அபராத தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயலினால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதோடு,மீன் வளமும் பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *