அதிசயக்கும் “அருகம் புல் “

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

ஆனை முக
ஆண்டவனே…
வேலவனின்
மூத்தவனே…

ஈன்றவரே
முதன்மையென்று,
ஞானப் பழம்
பெற்றவனே…

அருகம் புல்
குணம் சொல்ல,
அதைச் சுமந்து
நின்றவனே…

தினம் பாட
உன் பாட்டை,
திரன் வளரச்
செய்பவனே…

உலகத்தின்
முதற் கடவுள்
எனச் சிறப்புக்
கொண்டவனே…

அருள் மணக்கும்
உன் நேசம்,
திரள் வளர்க்கும்
உன் பாசம்…

எனை யாண்டு
நாள் தோரும்,
நீ யாக
வேண்டுமையா…

செல்வ விநாயகனின்
சீர்,
தங்களின் இல்லம்
சேர,
வேண்டுகின்றேன்…

அன்புடன் :
வேல் முருகன்
சுப்ரமணியம்…

( 07 ஆகஸ்ட் 2024 )

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *