ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு எதுவும் பெற்றுக்கொடுக்கவில்லை : ஏ. சி.எஹியாகான்

முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித பயனும் காணிகளை மீட்க திராணியற்ற, கல்முளை அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் ஸ்ரீலங்கா காங்கிரஸில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது 6 உணர்ந்து நான்காண்டுகளாக சிந்தித்து கொன் இப்போது அங்கிருந்து வெளியேறியிருக் என்னுடைய பிரதிப்பொருளாளர் பதவி அட கட்சியின் பதவிகளை இதுவரை துறக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரும்பினால் நீக்கிக்கொள்ளட்டும் என ஐக்கிய மக்கள் காங் பொது செயலாளர் ஏ. சி.எஹியாகான் தெரிவித்த

சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் காங் அலுவலகத்தை இன்று (23) திறந்து வைத்து விட் சந்திப்பில் கலந்து கொண்டு அங்கு உரையாற்றி இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு அவர்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி அமைச்சராக இருந்தும் கல்முனைக்கு அபிவிருத்திகளும் நடக்கவில்லை. கல்மு அபிவிருத்தி செய்ய முன்னாள் இராஜாங்க அ எச்.எம்.எம். ஹரீஸ் எடுத்த எத்தனங்களை அ தடுத்தார்கள். கடந்த பொதுத்தேர்தலிலும் த ஆமாம் சாமிகள் அவர் கூட தேர்தலில் களமிறங் அவர்கள் தோற்று ஹரீஸ் வென்றுவிடுவார் என் ஹரிஷை தேர்தலில் களமிறங்க விடாமல் சதி தடுத்தார்கள். இந்த முஸ்லிம் காங்கிரஸில் மக்களை பற்றி சிந்திக்க முடியாது. சிந்தித்தவர்கள் வெளியேறிவிட் அல்லது வெளியேற்றப்படுகிறார்கள்.

கூஜா தூக்கிகளுக்கு சாமரம் வீசும் வேலையை செய்வதையே முஸ்லிம் காங்கிரஸ் தலையாய கடமையாக கொண்டுள்ளது. இதனால் தான் மக்கள் அவர்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் இன்னும் பல பாரம்பரிய கட்சிகளையும் நிராகரித்து தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரண்டார்கள். நாங்களும் அவர்களுக்கு தேவையாயின் ஒத்துழைப்பு நல்க தயாராக இருக்கிறோம். எங்கள் தொகுதிக்கு கிடைத்த தேசிய பட்டியல் எம்.பிக்கு ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறோம். எங்களுடன் ஒன்றாக இருந்த துரோகிகள் எங்களை பல இடங்களில் காட்டிக்கொடுத்து பதவிகளை பெற்றுக்கொண்டார்கள். 

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களிலும் திருகோணமலை உட்பட இன்னும் சில மாவட்டங்களிலும் நாங்கள் களமிறங்க தயாராகி வருகிறோம் என்றார்.

-நூருல் ஹுதா உமர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *