இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

117 கிலோ கிராம் ஏலக்காய்களுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரேதமாக கொண்டுவரப்பட்ட 117 கிலோ கிராம் எடையுள்ள ஏலக்காய்களுடன் கொழும்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் சுங்க வரிகளைத் தவிர்த்து, ஏலக்காயை கடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (05) விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 41 மற்றும் 49 வயதுடைய கொழும்பு 08 மற்றும் 13 ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப் பிரவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *