சாமர சம்பத் தசநாயக்கவிற்கு இன்னொரு வழக்கு| தொடரும் விளக்க மறியல்
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இன்னொரு வழக்கில் விளக்கமறியலில் வைத்திருக்க பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனடிப்படையில், அவரை வரும் ஏப்ரல் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாமர சம்பத் தசநாயக்க திங்கட்கிழமை (ஏப்ரல் 7) காலை, இன்னொரு வழக்கின் விசாரணைக்காக பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட வேளையில், இந்த புதிய விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.