இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் .

கம்பஹா மாபாகே பகுதியில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது

மேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த இரு சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

கம்பஹா மாபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிசறை ஜேகொப் மாவத்தை பகுதியில் வேறு வீதியினூடாக வந்த கார் ஒன்று வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது மோதியுள்ளது.

சம்பவத்தில் 3 சிறுவர்களும்  படுகாயமடைந்து  ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் படுகாயமடைந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *