பிரதமருடன் IMF இற்கான புதிய தூதுக்குழு தலைவர் சந்திப்பு
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய தூதுக்குழு, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தது.

இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அதன் மேம்பாட்டுக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
IMF இன் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில், இதுவரை இலங்கை சாதித்துள்ள முன்னேற்றங்களும், எதிர்கால பொருளாதார இலக்குகளை அடைவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளும் குறித்து இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், நாட்டில் உருவாகி வரும் புதிய பொருளாதார சவால்கள் மற்றும் அவற்றை சமாளிக்க வேண்டிய தீர்வுகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.