சீனா விதித்த பதிலடி வரியினை திரும்ப பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்- டொனால்ட் ட்ரம்ப்..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் உலக நாடுகளின் பொருட்களுக்கு அதிகப்படியான வரியினை விதித்துள்ள நிலையில் சீனா மீது 50 வீத வரியினை விதிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.சீனா விதித்த 34 வீத பதிலடி வரியினை திரும்ப பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும் வரி விதிப்பு தொடர்பான சீனாவுடனான அனைத்து பேச்சு வார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.