யாழ்ப்பாணத்தில் நடந்த சுயமரியாதைக்கான நடைபயணம்
யாழ்ப்பாணத்தில் சுயமரியாதைக்கான நடைபயணம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த இந்த நடைபயணம் மூன்றாம் பாலினத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட பயணமாகும்.
யாழ் நகரத்தின் பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்த குறித்த நடைபயணமானது பண்ணைவீதியூடாக யாழ்ப்பாண பொது நூலகத்தை சென்றடைந்தது.
![](https://vetrinadai.com/wp-content/uploads/2024/06/Screenshot_20240608_211050_Samsung-Notes.jpg)
நடைபயணத்தில் கனேடிய உயஸ்தானிகரும் அவரோடு இணைந்து தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுக்கு வேண்டிய சமத்துவம் மற்றும் சமூக நீதியை வெளிப்படுத்தியதான இந்த நடைபயணத்தில் , அவை தொடர்பான பல்வேறு வாசகங்களை தாக்கியதாக இந்த நடைபயணம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.