அன்பான விருந்தினரை படுகொலை செய்தமைக்கு பழி வாங்குவோம்-ஈரான்..!

ஹமாஸ் போராளிகளின் அரசியல் பிரிவு தலைவராக செயற்பட்டு வந்த இஸ்மாயில் ஹணி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.62 வயதான இவர் நேற்று ஈரான் தலை நகரில் உள்ள அவரது வீட்டி வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேல் தான் இஸ்மாயிலை படைகொலை செய்துள்ளதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்திவருகிறது.இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஹமாஸ் போராளிகளின் தலைவர் கொல்லப்பட்டமைக்கு பழி வாங்குவோம் என ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர் இஸ்மாயில் எங்கள் அன்பான விருந்தாளியாக இருந்தார் .அவர் தெஹ்ரானில் படுகொலை செய்து இஸ்ரேலானது தனக்கான தண்டனையை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இஸ்ரேலை பழிவாங்குவது ஈரானின் கடமை என்று நாங்கள் கருதுகின்றோம்”என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *