தொடரை இழந்த இந்திய அணி| 27 ஆண்டுகளின் பின் இந்த நிலை

27 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி இலங்கையிடம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்துள்ளது.

இந்திய அணியானது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது.இதில் மூன்று T20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்குபற்றியது.

இதில் T20 போட்டியினை இந்திய அணி கைப்பற்றியது.இந்நிலையில் அடுத்து நடந்த ஒரு நாள் தொடரில் பங்கு பற்றிய இந்திய அணி பின்னடைவை சந்தித்தது.இலங்கையணி முன்னிலைக்கு வந்தது.

இன்றைய தினம் கொழும்பில் இரு அணிகளும் சந்தித்தன. இதில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதில் 50 ஓவர்கள் நிறைவில் இலங்கையணி 07 விக்கட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 26.01 ஓவரில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை எடுத்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம் இலங்கையணி ஆனது 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிக சிறந்த வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் இலங்கை அணி சார்பாக வெல்லாலகே சிறப்பாக விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *