இலங்கை இந்தியாவிற்கு இடையில் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்..!

எதிர்வரும் 13ம் திகதி முதல் இலங்கை இந்தியாவிற்கு இடையில் கப்பல் போக்குவரத்து இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகள் காணப்படுவதாகவும் ,இதில் பயணிப்பதற்கு 34,200 வரிகள் உள்ளடங்களாக இருவழி கட்டணம் அறவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை 60 கி.கி எடையுடைய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் போக்குவரத்தில் இலங்கை இந்தியாவிற்கு இடையில் சிவகங்கை என்ற கப்பலே சேவையில் ஈடுப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *