ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு..!

ஐ.எஸ் தீவிர வாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பு கைப்பற்றியது.அப்போதிலிருந்து அங்கு இருக்கும் குறிப்பிட்ட பிரிவினரை இலக்கு வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பிரிவினர் கோர் மாகாணத்திலிருந்து டைகுந்தி மாகாணத்திற்கு ஒரு வாகனத்தில் செல்லும் போது அவர்களை இலக்கு வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இதன் போது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு தலிபான் அரசு கடும் கண்டனம் தெவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *