பதிவுகள்

அடுத்த வாரமளவில் தானும் கைதாவேன் என எதிர்பார்ப்பதாக நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

கிரிஸ் பரிவர்த்தனை தொடர்பில் தான் அடுத்தவாரம் கைதுசெய்யப்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரின் நலன் தொடர்பில் விசாரிக்க வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாமல்,

“அடுத்த வாரம் தான் கைது செய்யத் தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கிரிஸ் பரிவர்த்தனை ஒப்பந்தம் தொடர்பான போலியான ஆதாரங்களை உருவாக்கி தன்னை கைது செய்யத் தயாராகி வருகின்றனர்.

அதன்படி, அடுத்த வாரம் முதல் அவர்களுடன் தான் இணைய வாய்ப்புள்ளது” என நாமல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *