ஐரோப்பாவை நோக்கிப் படகில் வந்த 15 பேர் இறந்தனர்

ஆபிரிக்காவைச் சேர்ந்த 15 பேர் ஐரோப்பாவை நோக்கிப் படகில் சென்றபோது படகு மூழ்கி இறந்துவிட்டதாகத் துனீசியக் கடற்படை அறிவிக்கிறது. அப்படகில் பயணித்த 34 பேர்களில் 19 பேர்களைத் தாங்கள் காப்பாற்றியிருப்பதாக துனீசியாவின் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

மொரொக்கோவிலிருந்து கடலில் இறக்கப்பட்ட அப்படகு அல்ஜீரியாவின் தலைநகரிலிருந்து 450 கி.மீ தூரத்தில் கடலுக்குள் கவிழ்ந்தது. இறந்தவர்கள் எந்த நாட்டவர்கள் என்று விபரம் தெரிவிக்கப்படவில்லை.

சில வாரங்களாகவே லிபியா, மொரொக்கோ போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கிக் குடியேறச் செல்பவர்கள் அல்ஜீரியாவினுள் புகுந்துவிடுவதாக அல்ஜீரியா சொல்லிக்கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *