இடர் மிகுந்த காலத்தில் கல்விப் பணியாற்றியவர் வே.தி.செல்வரட்ணம் அவர்கள்

இடர்மிகுந்த காலங்களில் கல்விப்பணியாற்றி சமூக மட்டத்தில் தனி ஆளுமையாக விளங்கியவர் வே.தி.செல்வரட்ணம் அவர்கள் இன்று காலமானார். யாழ்பாண மாவட்டத்தின் முன்னாள் மேலதிக கல்விப்பணிப்பாளராகவும் வடமராட்சியின் யாழ்ப்பாண கல்வி வலயங்களின் பணிப்பாளராகவும் அமைந்து யாழ்ப்பாண கல்விச்சமூகத்தின் தவிர்க்கமுடியாத நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவரும் ஆவார்.

வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகக்கொண்ட திரு செல்வரட்ணம் அவர்கள் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் பழையமாணவர் ஆவார். கல்லூரியிலும் தன் பணியாற்றிய இவர் யாழ் மாவட்டம் முழுவதிலும் தன் நிறைவுக்காலம் வரை சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *