கால்பந்தாட்ட சுதந்திரக்கிண்ணம் | வடக்கு மாகாண வசம்

மாகாணங்களுக்கிடையிலான சுதந்திரக்கிண்ண கால்பந்தாட்டப் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற வடக்குமாகாண அணி வெற்றிக்கிண்ணத்தை தம்வசப்படுத்தியது.

இன்று துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்மாகாண அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தபோட்டியில் வடக்கு மாகாண அணி 3 கோல்களை அடித்து வெற்றிபெற்றிருந்தது.

இந்த சுற்றுப்போட்டி இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாடாக இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *