கரவை யார்க்கரு வரசித்தி விநாயகர் திருவிழா ஆரம்பம்

கரவை யார்க்கரு வரசித்தி விநாயகர்
விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா இன்று புதன்கிழமை (09-03-22) தொடங்குகிறது.

இன்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதேவேளை வரும் 15ம் திகதி வியாழக்கிழமையன்று தேர்த்திருவிழாவும் தொடர்ந்து வெள்ளிக்கிழமை 16-03-2022 அன்று தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறும்

வருடாந்த திருவிழாக்காலங்களில் தினமும் காலை 07:00 மணிக்கு அபிஷேக ஆராதனைகளுடன் பகல் உற்சவம் ஆரம்பமாகும்.அதேவேளை மாலை 06:00 மணிக்கு மூலஸ்தான பூஐையுடன் இரவு உற்சவம் இடம்பெறும்.

முக்கியமாக திருவிழாக்காலங்களில் கோவிலுக்கு வரும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கபட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *