நல்லூர் கந்தனுக்கு சிறப்புடன் நிறைவேறிய தீர்த்தம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனின் தீர்த்தத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்று நிறைவேறியுள்ளது.

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் பல மக்கள் கலந்து சிறப்பித்து சிறப்பாக நடந்தேறியுள்ளது.

நேற்றையதினம் தேர்த்திருவிழாவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகையோடு சிறப்புற இந்தவருடம் நடைபெற்றிருந்தது.

கடந்த இருபத்தைந்து நாட்களாக சிறப்புடன் நடைபெற்ற திருவிழாக்கள் இன்றைய நாள் மாலை கொடி இறக்கத்துடன் இன்றைய திருவிழா நிறைவுக்கு வரும்.

வழமைபோலவே இடம்பெறும் பூங்காவனம் நாளையநாள் மாலைவேளையும் நாளைமறுதினம் வைரவர் உற்சவத்துடன் வருடாந்த திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுக்கு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *