இனிதே நிறைவான நல்லூரான் சப்பறம்

ஈழத்தின் மிக பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் சப்பறத்திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.இலங்கையின் மிகப் பிரபல்யம் வாய்ந்த சப்பறத்திருவிழா நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெறும் இந்தத் திருவிழாவாகும்.

கடந்த மூன்று வருடங்களாக கொரோனா பெருந்தொற்றினால் அதிக மக்களால் கலந்துகொள்ள முடியாத திருவிழாக்களாக நிறைவாகியிருந்தது.

அதன் காரணத்தால் இவ்வருடம் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டும் வருகின்றனர். இன்றைய நாள் சப்பறத் திருவிழாவிலும் பெருந்திரளான மக்கள்கலந்து கொண்டுள்ளனர்.

அதேபோல் நல்லூர்த் தேர்த்திருவிழாவிலும் இன்னும் திரளாக மக்கள் கலந்துகொள்வர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *