என் கனவு தேவதை

விழியில் ஆயிரம் கவிதை படித்தவள்!

மையிட்டக் கண்களால் என்னைக் கைது செய்தவள்!

அவள் கண்கள் பேசிய நளினத்தால் என்னை இழந்தேன்!

நெற்றியில் வைத்த வட்டப் பொட்டு என்னை வா என்று அழைக்கிறது!

அவளின் மூக்குத்தி முத்தாட என்னை அழைக்கிறது!

லிப்ஸ்டிக் இல்லாத அழகு உதட்டிற்கு சொந்தக்காரி!

உதடுச் சுழிப்பில் என்னை மயக்க நிலைக்கேக் கொண்டுச் சென்றாளே!

காதுகளில் ஆடுகின்ற ஜிமிக்கியின் நடனத்தைப் பார்த்துக் கிறங்கித்தான் போனேன்!

கை ஜாடையில் கற்பனையை வளர்த்தவள்!

பேசாமலேயே என்னைக் கட்டிப் போட்டவள்
என் மனதின் சொந்தக்காரி அவள்!

என்னைச் சந்திக்க எப்போது வருவாள் என்று கேட்டுச் சொல்லுங்கள்!

*வெற்றிஜெயா*

என் புனைப் பெயர் தினேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *