மெய்வல்லுனர்கள் போட்டிகள்-2023

விளையாட்டுக்கள் தான் ஒவ்வொருவருடைய நடத்தையை பிரதிபலிக்கின்றன.விளையாடும் போது நமது உடலுக்கு கிடைக்கும் உற்சாகம் மிக பெரியது.

முத்தமிழ் மன்றம் -சௌத்தென்ட் பெருமையுடன் நடாத்தும் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி -2023, 15.07.2023 சனி கிழமை காலை10.00 மணிமுதல் St.Mary’s,Prittlewell,C of E Primary School,Boston Avenue ,Southend -On-Sea,SS26JH ல் நடைப்பெறவுள்ளது.

பல போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.இதில் இருக்கும் மிகப்பெரிய சிறப்பம்சம் தான் பாரம்பரிய விளையாட்டுக்கள். தற்காலத்தில் இந்த பாரம்பரிய விளையாட்டுக்கள் அருகிகொண்டு தான் செல்கின்றது. இன்றைய கால தலைமுறைக்கு பாரம்பரிய விளையாட்டுக்களை கண்டு இருக்கின்றார்களா ?அல்லது விளையாடி இருக்கிறார்களா? என்று கேட்டால் இல்லை என்று தான் பதில் வரும். அந்த இல்லை என்ற சொல்லை இல்லாமல் ஆக்குவதற்கு தான் இந்த மெய்வல்லுனர் போட்டிகளில் பாரம்பரியவிளையாட்டுக்களையும் இணைத்திருப்பது மிக மிக சிறந்த விடயமாகும்.

ஆகவே விளையாட்டுக்களை கண்டுமகிழவும்,போட்டியாளர்களுக்கு உற்சாகம் ஊட்டி நீங்களும் உற்சாகம் பெற்றிட அனைவரையும் அழைக்கின்றார்கள்.

இதே நேரம் போட்களில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் கீழ்கண்ட தொலைப்பேசி இலக்கங்களுக்கு தொடர்பை மேற்கொள்ளுங்கள்.குகன்-07957441521,ஜோ07958038037,செல்வம்-07990484929,தயா-07535692693.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *