புனித ஹஜ் பெருநாள் இன்று

இன்றைய தினம் ,அனைத்து,
இஸ்லாமிய மக்களும் ஹஜ் பெருநாள் தினத்தை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் முகமாக அனைத்து பள்ளி வாசல்களிலும் விசேட துவா பிரார்த்தனை இடம் பெற்றது.இதன் போது பெருதிறளான மக்கள் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை10ல் ஹஜ் பெருநாள் கொண்டாடபடுவது சிறப்பம்சமாகும்.

இஸ்லாமிய மக்கள் தமது கலை கலாச்சாரத்தோடு புத்தாடை அணிந்து, கட்டி தழுவி வாழ்த்துக்களை கூறியும்,உறவினர் வீடுகளுக்கு சென்றும் ,இனிப்புகளை பகிர்ந்தும் மகிழ்ச்சியாக இந்த ஹஜ் பெருநாள் தினத்தை கொண்டாடினர்.

கடந்த சில வருடங்களாக கொரோனா தொற்றின் தாக்கத்தால், ஹஜ் பெருநாளை கொண்டாட முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இம்முறை இடர்பாடின்றி மகிழ்ச்சியாக ஹஜ்பெருநாளை கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *