Titan.. சிதைவிற்குள் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

ஓஷியன் கேட் நிறுவனத்திற்கு சொந்தமான டைடன் கடந்த 18ம் திகதி 5 செல்வந்தர்களுடன் காணமல் போனது.

இதனை தொடர்ந்து தேடுதல் பணியானது தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 22ம் திகதி மாலை ,டைடானிக் கப்பல் தளத்தை சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைடனின் 5 பெரிய பாகங்களை கண்டுபிடித்ததாக அமெரிக்க கடலோரப்படை தெரிவித்தது.

நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்கள் ஐவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே டைடானிக் கப்பலை நோக்கி சென்ற நீர்மூழ்கியின் சிதைவுகளிற்குள் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *