மும்பை இந்தியன்ஸிற்கு மீண்டும் ஹர்த்திக் பாண்ட்யா திரும்புவாரா?

ஹர்த்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர் வரும் 2024 ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் எதிர் வரும்19ம் திகதி நடைப்பெற இருக்கிறது.

ஏலம் நடைப்பெறுவதற்கு முன்பாக வீரர்களை பரிமாறிக்கொள்ளலாம் மற்றும் தமது அணிகளில் இருந்து விடுவிக்கலாம்.

ஹர்த்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து 2022 ஆம் ஆண்டு குஜராத் டைடன் அணிக்கு சென்றார்.இவர் டைடன் அணியின் தலைவராக செயற்பட்டு ஐபிஎல் கிண்ணத்தை சுவிகரித்தது.

இதே வேளை கடந்த ஐபிஎல் போட்டியிலும் 2ம் இடத்தை பெற்றது.

இந்நிலையில் தான் ஹர்த்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *