இதற்காகவா யாழ் நூலகம் எரிக்கப்பட்டது…?

ஆசிரியர்கள் …
அ , ஆ …விலிருந்து
ஆரம்பித்துக் கொடுத்த
வாழ்க்கை ….
கல்லறை வரை
தொடர்கிறது …!

கல்வி முறை மாறுவது
கற்ப்பிப்பவன்
குற்றமில்லை …
அது அந்த நாட்டை
ஆளும் அந்தந்த
அரசியலைச் சார்ந்தது …!

குருகுலக் கல்வியை
அழித்தால் தான்
இந்தியர்களின் , தமிழர்களின்
ஒற்றுமையை
உடைக்க முடியும் என
மெக்காலே வகுத்த சதி
இன்றுவரை நாம்
ஒன்றுபட முடியாமலே
போகிறது …!

ஒரு நாட்டை
அடிமைப் படுத்த வேண்டுமெனில்
அந்த நாட்டின் இலக்கியங்களை
அழிக்க வேண்டும் எனும் …
தந்திரமே இலங்கையில்
( யாழ் நூலகம் )
யாழ்ப்பாண நூலகம்
எரிக்கப்பட்டது – அதே தந்திரமே…!

இலக்கியம் ஆசிரியகளுக்கு
பாடம் நடத்துகிறது … ஆசிரியர்கள்
நமக்குப் பாடம் நடத்துகிறார்கள் …!

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *