சாக்கடை நீர் உங்கள் பகுதிலில் ..!

இப்போது தெருவெங்கும் குப்பைகள் …

ஏனெனில் மனித
மூளைக்குள்
அதுதானே
குவிந்து கிடக்கிறது …!

தான் ஒன்று செய்ய
அதன் விளைவு தனக்கு வரவே
வராது … எனும்
அதீத ஆழமான நம்பிக்கையில்
வாழும் ஒரே இனம்
இந்த மனித இனம்
மட்டுமே … 😭

தெருவெங்கும் நாற்றமும்
சகதியுமாய் கிடக்கும்
போது ஆரோக்கியம் பற்றிப்
பேசி என்ன பயன் …!

ஓடும் சாக்கடை நீர்
ஓடாத படி …
காகிதங்களையும் …
தண்ணீர் பாட்டிகளையும்
சாக்கடையில் கொட்டினால்
சாக்கடை நீர் தெருவுக்கு
வராதா ? என்ன ?

இங்கே பொறுப்புக்கள்
நம் எல்லோர்க்குமே உண்டு …
இதற்கு
ஏதோ துப்புரவாளர்கள்
மட்டுமே பொறுப்பாளர்கள்
இல்லை …!

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *