துவளாதே…!

துவளாதே!!!

வாழ்வெனும் பாதையில் வரும் பலஇன்னல்கள்!!

துவண்டால் உன்னை தூக்கியடிக்கும்!

எதிர்த்து உதறினால் ஏகாந்த வெற்றி!

ஒருகதவை துன்பம் மூடத்தான்செய்யும்!

மறுபக்க கதவில் இன்பம் நிற்கும் ஏற்றுக்கொள்!

தோல்விகண்டு பயந்தால் வெற்றிஎட்டிப்போகும்!

உன்னை எள்ளிநகையாடுபவரை துள்ளியடி!

எதிர்த்துநில் எதுவும் ஒடும்!

வாழ்வில் வசந்தம் வர துவள்வதை நிறுத்து!

புயல்காற்றதை உன்சாமர்த்திய அறிவால் தென்றலாக மாற்று

மனதில் துணிவும் செயலில் நன்முயற்சியும் இருக்கட்டும்!

வெற்றிக்கனி உன்மடியில்,விழ துவண்டுபோகாமல் துணிந்துநில்!

கோமதிசிதம்பரநாதன் ,திருச்சி3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *