ஏன் இந்த கலவரங்கள்..!

இங்கே … இந்த
உலகில் ஞானியர்கள்
எனப் போற்றப் பட்டவர்கள் ( அவர்கள் அரசியல் நடத்த வரவில்லை இந்த உலகை இயற்கையை நேசித்தவர்கள் இங்கே ஒவ்வொரு உயிரிலும் கடவுளே நிறைந்திருக்கிறான் என உணர்ந்து சொன்னவர்கள் ) ஆன்மீக விளக்கம் கொடுத்து …!


உன்னை நீ அறி … உனக்கு நீயே ஒளி …
எனச் சொல்லிப் போனதை வைத்து இங்கே மதத் தலைவர்கள் வளர்ந்தார்கள் …!

அந்த ஆத்ம ஞானிகளின் நோக்கம் செத்துப் போனது … இங்கே அன்பை கருணையைப் பரப்ப வந்தவர்கள் எவரையும் வணங்க மட்டுமே தெரிந்து கொண்ட மனிதன்… தானும் ஈவு , இரக்கம் , கருணையுடையர்வளாக மலர வேண்டும் என முயற்சி செய்யவே இல்லை …!

இங்கே இந்தப் பரிணாமம் என்பதே கூட அடுத்து அடுத்து என வளர்ந்தது மட்டுமே … ஆனால் எங்கேயோ நின்று போன நீர் ஓட்டம் சாக்கடை ஆனது போல இன்றை அரசியல் , ஆன்மீகம் எல்லாம் …!


இங்கே அவரவர்க்குத்தக்கபடி …உண்மையை , இயற்கையை மாற்ற முனைவதில் தான் இந்த உலகக் கலவரங்களே …!

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *