மின்னும் நட்சத்திரங்கள்..!


ஜன்னலோரம்


ஜன்னலோரம்
நின்று கொண்டு
வானத்தை
ரசிக்காதே …

மின்னும்
நட்சத்திரங்கள் …

பால் ஒளி
சிந்தும் நிலா …

பகல்
பொழுதுகளில்
மேகங்கள்
வரையும்
ஓவியங்கள் …

வண்ணமயமான
வானவில் …

துடிப்புடன்
பறந்து செல்லும்
பறவைகள் என
எதையும் ரசிக்க …

ஜன்னல்கள்
எதற்கு ?

வானளாவிய
பார்வை
கொண்டு …
வெளியே வா …

குனிந்த
தலையை
நிமிர்த்து …

ஆகாயம்
முழுவதும்
ரசிகனின்
சொந்தம் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *