41 தொழிலாளர்களை மீட்டவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!

இந்தியாவில் சுரங்கப்பாதை ஒன்றில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உத்திரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சில்க்யாரா சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களே 17 நாட்களின் பின் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவின் குறிப்பிட்ட தொழிலாளர்கள் சிக்கி இருந்த இடத்திற்கு குழாய் வழியாக சென்று சக்கரங்கள் பொருத்திய ‘ஸ்டிரெச்சர்கள்’ மூலம் ஒருவர் பின் ஒருவராக குறிப்பிட்ட தொழிலாளர்களை மீட்டுள்ளனர்.

இவர்களை மீட்ட மீட்பு குழுவினர்க்கு அனைவரும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை முதல் அமைச்சர் மு.கா .ஸ்டாலின் மீட்பு குழுவினர்க்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தனது எக்ஸ் தளத்தினூடாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *