புர்ஜ் கலிப்பாவில் இந்திய தேசிய கொடி…!

நேற்றைய தினம் இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்தியாவில் மாத்திரமன்றி உலகளவில் விசேடமாக கொண்டாடப்பட்டது.

இந்த வகையில் டுபாய நாட்டில் காணப்படும் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிப்பா கட்டிடத்தில் இந்திய தேசிய கொடி லேசர் ஒளியால் ஒளிரப்பட்டது.

இதே வேளை இக்கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர்வெளிச்சத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டிருந்தது.

புர்ஜ் கலிப்பா மற்றும் இதர விடயங்களை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் டுபாயிற்கு வந்து செல்கின்றனர்.இவர்கள் புர்ஜ் கலிப்பாவில் இந்திய தேசிய கொடி, மஹாத்மா காந்தி மற்றும் நிகழ்வுகளையும் கண்டு மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *