காதலனை மரத்தில் கட்டி , கொள்ளையடித்த காதலி கைது..!

காதலர்கள் உண்மையாக காதலிக்கிறார்களோ இல்லையோ… ஆனால் பல காதல் சம்பவங்கள் இப்படியும் நடக்கிறதா காதலில் எனவும்,ஆண்கள் பெண்களை ஏமாற்றிய காலம் போய் , பெண்கள் ஆண்களை ஏமாற்றும் காலம் வந்து விட்டது என எண்ண தோன்றுகிறது.

இளைஞர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து விட்டு கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்திருந்த போது தனது காதலியை பார்ப்பதற்காக மாங்குளம் பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.அப்போது குறித்த இளைஞனின் காதலி தனது சகோதரருடன் இணைந்து தனது காதலனை மரம் ஒன்றில் கட்டி வைத்து விட்டு பணம் மற்றும் கைத்தொலைப்பேசியை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பாதிப்புக்குள்ளான இளைஞனின் காதலியையும், அவரது சகோதரனையும் மாங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் தொடரபாக மேலும் இருவர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இளைஞர்களே …யுவதிகளே..காதல் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அப்படி காதல் கிடைத்தால் உண்மையாக காதலியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *