தாலி கொடியை திருடிய ஆசிரியை கைது..!

தாலி கொடியை திருடிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் உடப்பு பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த சமயம் கழுத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த ஆசிரியை தனது கழுத்திலுள்ள தாலி கொடியினை கழட்டி தனது பேக்கில் வைத்து விட்டு பாடம் நடத்திக்கொண்டு இருந்திருக்கிறார்.

இதனிடையே பாடசாலையின் அதிபர் குறித்த ஆசிரியையை அழைத்ததின் பேரில் அவ்விடத்தை விட்டு வெளியேறி இருக்கிறார். சிறிது நேரத்தின் பின் குறித்த ஆசிரியை தனது பேக்கை பார்த்த போது தாலி கொடியை காணவில்லை.இதன் பிறகு பாடசாலை அதிபரிடம் முறையிட்டதிற்கு அமைய,அதிபர் பாடசாலை மாணவர்களிடம் விசாரித்துள்ளார். இதன் போது பிறிதொரு ஆசிரியை பேக்கை திறந்து பார்த்தது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பாடசாலையின் அதிபர் பொலிஸாருக்கு அறிவித்ததன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியையை விசாரணைக்குட்படுத்தியதில் குறித்த ஆசிரியை தாலி கொடியினை எடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.திருடிய நகையினை பாடசாலையின். பாதுகாப்பு வேலிக்கு அருகில் சிறிய குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஆசிரியையை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *