மகளை கேலி செய்த நபரை கொன்ற தந்தை கைது..!

இன்றைய கால இளைஞர்கள் பெண்களை கேலி செய்வது கிண்டல் செய்வது என்பன ஆங்காங்கே நடைப்பெருகின்றன. இந்த வகையில் தனது இரண்டாவது மகளை கேலி செய்தார் என்பதற்காக தந்தை ஒருவர் ஒரு இளைஞனை கத்தியால் நெஞ்சிலே குத்தி கொன்று இருக்கிறார்.

கொழும்பு இரண்டாம் நவகம்புர பகுதியில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.சம்பவத்தில் பரமானந்தா தினேஷன் என்ற 21வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தின் போது பயன் படுத்தப்பட்ட ஆயுதம்,உடுத்தியிருந்த ஆடை என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை குறித்த சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்த குற்ற சாட்டில் அவருடைய நண்பரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இளைஞர்களே இனியாவது பெண்களை கேலி செய்வதை நிறுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *