நீண்ட நாட்களின் பின் மழை..!

நீண்ட நாட்களின் பின் நேற்றைய தினம் மத்திய மழை நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மழை பெய்துள்ளது.

சில மாதங்களாக நாட்டில் கடும் வறட்சி நிலவியது .இதனால் நீர் நிலைகளில். நீர் வற்றியது.குடி நீரினை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. விவசாய பயிர்ச்செய்கைகள் காய்ந்து போயின. விவசாயிகள் நீர் வேண்டி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.தேயிலை செடிகள் காய்ந்து சருகாகின.நீர் கட்டணம் உயர்த்தப்பட்டது.இவ்வாறான நிலையில் மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கினர்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்படும் மக்களுக்கு கடும் வறட்சி நிலவியதானது மேலும் கஷ்டத்திற்கு உள்ளாக்கியது.இதனால் பொது மக்கள் மழை வேண்டி சமய நிகழ்வுகளையும் செய்திருந்தமை குறிப்பிடதக்கது.

இந்நிலையில் தான் நேற்றைய தினம் மழை பெய்துள்ளது.இதனால் மக்கள் மனங்களில் மகிழ்சசி ஏற்பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *